» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா

திங்கள் 8, ஜூலை 2024 7:59:15 AM (IST)



திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் தொடங்கப்பட்டு  ஓராண்டு நிறைவடைந்துதை ஒட்டி  முப்பெரும் விழா நடைபெற்றது.  

காவல்துறை ஆய்வாளர் ஆழ்வார் பேரூராட்சி தலைவர் பார்வதி முன்னிலை வகித்தனர்.  சங்கத் தலைவர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமை தாங்கினார். செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.  தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனரும் துபாய் சமூக நல ஆர்வலருமான  முனைவர் முகமது முகைதீன்  பிளாஸ்டிக்கை ஒழிப்போம் மஞ்சள் பை பயன்படுத்துவோம் என்ற முனைப்பை வலியுறுத்தி பேசினார். பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கிப் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். 

நிர்வாகிகள் சமது, ஷரீப், மோகன், ரசாக், டாக்டர் பத்மநாபன், ஷாகித், ஞான ராஜ், கார்த்திக், சாய் சுரேஷ், ஒளி மாலிக், சதீஷ், சந்திரசேகர், மஜீத் , அய்யனார் ஐயப்பன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்  மரக்கன்றுகள் நடப்பட்டு, மஞ்சள் பைகள் இனிப்பு வழங்கப்பட்டது. கல்லிடை ரயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பெற ரயில்வேத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில் அப்துல் சமது நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory