» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் விசாரணை நிறைவு : வழக்கு 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
புதன் 10, ஜூலை 2024 3:22:36 PM (IST)

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வருகிற 24ஆம் தேதிக்கு ஓத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இன்று வழக்கு விசாரணை மாவட்ட நீதிபதி ஐயப்பன் தலைமையில் வந்தது இன்று வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி தம்பிகள் மற்றும் ஒரு மகன் ஆஜராகாத நிலையில் இரண்டு மகன்களான ஆனந்த மகேஸ்வரன் மற்றும் ஆனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்
இந்நிலையில் இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது தொடர்பாக அரசு தரப்பு சாட்சியாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் சேர்க்கப்பட்டிருந்தார் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளிக்க மாவட்ட நீதிமன்றம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது
இதைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆஜரானார் அவரிடம் அரசு தரப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் நாகராஜ், மனோகரன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சேது ஆஜரானார். இதையடுத்து முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்தது இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி ஐயப்பன் உத்தரவு பிறப்பித்தார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
