» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வில் 2,524 பேர் ஆப்சென்ட் - ஆட்சியர் தகவல்!
சனி 13, ஜூலை 2024 4:24:03 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வினை 5075 பேர் எழுதினர். 2,524 பேர் வருகை புரியவில்லை என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு I (குரூப் I) நடைபெற்றதை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருநெல்வேலி மாவட்டத்தில், குரூப் -I பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற்றது.
தேர்வு நாளன்று தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக தேர்வு மையத்திற்கு வருவதற்கும், தேர்வு முடிந்த பின் செல்வதற்கும் போதிய பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள 27 தேர்வு மையங்களில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I (குரூப் -I) பதவிகளுக்கான முதல் நிலை தேர்வில் 7,598 தேர்வர்களில் 5075 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 2,524 தேர்வர்கள் வருகை புரியவில்லை.
மேலும் அனைத்து மையங்களிலும் தேர்வின் நடவடிக்கைகளை வீடியோ மூலம் பதிவு செய்யவும், தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு வழங்கவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

நரிக்குறவர் சமூக மக்களிடையே 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:35:37 PM (IST)

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை!
வெள்ளி 27, மார்ச் 2026 12:29:29 PM (IST)

அம்பை கோயில் கும்பாபிஷேக விழா: நகை பறிக்க முயன்ற 5 பெண்கள் கைது!
வெள்ளி 27, மார்ச் 2026 8:46:14 AM (IST)

பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி: மென்பொருள் பொறியாளர், நண்பர் கைது!
வியாழன் 26, மார்ச் 2026 8:41:00 AM (IST)

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ஆம் தேதி நெல்லையில் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதன் 25, மார்ச் 2026 5:48:47 PM (IST)

