» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து மறியல் போராட்டம்: 180 பேர் கைது!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 11:42:25 AM (IST)

தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
இந்திய மக்களுக்கு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து இடதுசாரிக்கட்சிகள் சார்பில் ஆக.1-ம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடியில் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்ததது.
மறியல் போராட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட 25 பெண்கள் உட்பட 75பேரை மத்திய பாகம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபோல் மத்திய அரசைக் கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகம்மது, மாவட்ட செயலாளர் (CPI-ML) முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுனன், பேச்சிமுத்து, அப்பாத்துரை, சண்முகராஜ், ராஜா, இடைக்கமிட்டி செயலாளர்கள் சங்கரன், முத்து, முனியசாமி, ரவிதாகூர், கணபதி சுரேஷ், நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உட்பட 105 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)

தலைமைAug 1, 2024 - 04:00:26 PM | Posted IP 162.1*****