» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)

செங்கோட்டையில் விநாயகர் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் செப்-7ஆம் சனிக்கிழமை விநாயகர் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருவதை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்காக செங்கோட்டை வேளாளா் தெருவில் மண்பாண்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தில் வைத்து சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படத வகையில் களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகளை மண்பாண்ட தொழிலாளா்கள் மும்மரமாக செய்து வருகின்றனா்.
இது குறித்து சங்கத்தலைவா் ஆறுமுகம் வேளாளர் கூறுயதாவது இந்த சிலைகள் குறைந்த விலை. ரூ.500 முதல் 20ஆயிரம் வரை 7அடி உயரம் கொண்ட விநாயகா் சிலை ரூ.20ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தயாரிக்கும் பணிகளை நாங்கள் ஆண்தோறும் செய்து வருகிறோம் மேலும் இந்தாண்டு பல்வேறு வகையான வடிவத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் முழுவதும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவைகளால் அமைக்கப்பட்டது.
இதில் ரசாயண கலவை ஏதும் கிடையாது இந்த சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது தண்ணீர் மாசுபடியாது மேலும் பணத்திற்கு தகுந்தபடி சிறு சிறு வர்ணம் பூசாத சிலைகளும் சிறுவர்களுக்கு கேட்டும் விதம் செய்து கொடுக்கிறோம். இந்த தொழிலில் வேலைக்கு ஏற்றபடி தொழிலாளா்களுக்க ஊதியம் கிடைப்பது இல்லை. உபயோகப்படுத்தும் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலைப்பாடுகள் அதிகம் இருந்த போதிலும் இப்பணிகளை இறைப்பணியாக நினைத்து மனதுக்கு ஆறுதலுடன் காலகாலமாக செய்து வருகிறோம் எனக் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
