» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் செல்லப் பிராணிகள் திருட்டு அதிகரிப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
ஞாயிறு 8, செப்டம்பர் 2024 4:47:49 PM (IST)

தூத்துக்குடியில் வீடுகளில் வளர்க்கப்படும் விலை உயர்ந்த வெளிநாட்டு வகை செல்லப் பிராணிகளை சிறுவர்களை வைத்து திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளில் நாய் பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்போர் தங்கள் வீடுகளில் உள்ள ஒருவரை போன்று செல்லப் பிராணிகளை வளர்ப்போர் மிகுந்த பாசத்துடன் குழந்தையை பாதுகாப்பது போன்று அதற்கான தனி அறை உணவுகள் மருத்துவ வசதி என வளர்த்து வருகின்றனர்
இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு காட்டன் தெரு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் வீட்டில் விலை உயர்ந்த வெளிநாட்டு வகையை சேர்ந்த பக்(pug) என்ற நாயை தங்கள் குழந்தையை போல் வளர்த்து வந்துள்ளனர் நேற்று தங்கராஜின் வீட்டிற்கு வெளியே நாய் நின்று கொண்டிருந்தள்ளது சிறிது நேரத்தில் நாய் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதை அடுத்து வீட்டில் மாட்டி இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர்.
இதில் அந்தப் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் முதியவர் ஒருவருடன் வந்த சிறுவன் வீட்டின் வெளியே தனியாக நின்றிருந்த நாயை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாசமாக வீட்டில் குழந்தையை போல் வளர்த்த நாயை பறிகொடுத்த தங்கராஜ் குடும்பத்தினர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் நாயை கண்டுபிடித்து தரும்படி சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் வழங்கி புகார் அளித்துள்ளனர்.
இதேபோன்று தூத்துக்குடி புது கிராமம் பகுதியில் தனது வீட்டில் செல்லப்பிராணியாக பூனையை வளர்த்து வந்த பெண் ஒருவர் தனது பூனையை காணவில்லை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 5000 சன்மானமாக வழங்கப்படும் என தனது செல்போன் எண்ணுடன் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளார்.
இவ்வாறு தூத்துக்குடி மாநகர பகுதிகளில் செல்ல பிராணிகளை திருடி ஒரு கும்பல் அதை திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருகிறது எனவே காவல்துறையினர் இந்த கும்பலை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் செல்ல பிராணிகள் வளர்போர் கோரிக்கை எடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

Common ManSep 9, 2024 - 05:46:22 AM | Posted IP 162.1*****