» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நிலத்திற்கு வைத்த தீயில் தடுமாறி விழுந்த விவசாயி பலி: கோவில்பட்டி அருகே பரிதாபம்!
திங்கள் 9, செப்டம்பர் 2024 8:27:04 AM (IST)
கோவில்பட்டி அருகே நிலத்தை உழவுப்பணிக்கு தயார் செய்வதற்கு செடிகொடிகளை வெட்டி தீவைத்த விவசாயி, தடுமாறி தீயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நிறைகுளத்தான் (70). விவசாயி. இவர் ஊரில் உள்ள விவசாயம் செய்வதற்காக ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த நிலத்தில் புரட்டாசி விதைப்பு பணிக்காக உழவு பணிகள் மேற்கொள்ள தயார் செய்து வந்தார். முன்னதாக நிலத்தில் உள்ள செடி, கொடிகளை வெட்டி தீவைத்து எரித்துள்ளார்.
அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பக்கத்தில் உள்ள நிலங்களுக்கும் தீ பரவி உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தீ பரவுவதை தடுக்க முயன்றுள்ளார். காற்றின் வேகம் அதிகரித்து கொண்டே இருந்ததால், தீ மளமளவென எரிந்துள்ளது. இதனால் தீயின் வெப்பமும் அதிகமாக இருந்தது. ஆனாலும் பக்கத்து நிலங்களுத்து தீ பரவாமல் தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி நிலத்தில் எரிந்து கொண்டிருந்த தீயில் விழுந்துள்ளார்.
இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்டநேரத்திற்கு பிறகு அப்பகுதிக்கு சென்ற சக விவசாயகள் கொடுத்த தகவலின் பேரில் கொப்பம்பட்டி போலீசார் சம்பவ நிலத்துக்கு சென்று, நிறைகுளத்தான் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

SamuelSep 9, 2024 - 10:58:02 AM | Posted IP 172.7*****