» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அ.தி.மு.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை: நடைபயிற்சி சென்றபோது கும்பல் வெறிச்செயல்!
திங்கள் 9, செப்டம்பர் 2024 8:33:00 AM (IST)
சங்கரன்கோவில் அருகே நடைபயிற்சிக்கு சென்ற போது அ.தி.மு.க. நிர்வாகியை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வெளியப்பன் (49). அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருடைய மனைவி மாரிச்செல்வி (45). இவர் மேலநீலிதநல்லூர் ஒன்றிய முன்னாள் துணை தலைவி ஆவார். வெளியப்பன் தினமும் நெல்லை - சங்கரன்கோவில் சாலையில் சர்வீஸ்ரோட்டில் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அதுபோல் நேற்று காலையில் வெளியப்பன் நடைபயிற்சி செய்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த போது, ஒரு கும்பல் அவரை திடீரென்று வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. உடலில் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பனவடலிசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி சீனிவாசன், சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகன், பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அதே நேரத்தில் வெளியப்பன் குடும்பத்தினர், உறவினர்களும் அங்கு திரண்டனர். அவரது உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து வெளியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? என்பது குறித்தும் ேபாலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வெளியப்பனுக்கும், சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உண்டா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் கொலையாளிகள் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. நிர்வாகி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி: அறநிலையத்துறை ஊழியர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:27:17 AM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

திருநெல்வேலி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு : பொதுப் பார்வையாளர் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:54:44 PM (IST)

த.வெ.க., வேட்பாளருக்காக பிரச்சாரம்: நண்பரின் மகனுக்காக வாக்கு சேகரித்த நடிகர் ராமராஜன்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:49:54 PM (IST)

குடும்பத் தகராறில் பெற்ற தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:03:40 AM (IST)

