» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)
செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை கொடுப்பதாக போலீஸ்காரர் மீது இளம்பெண் ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை வழங்கினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனு குறித்து அவர் கூறியதாவது: கடந்த 2023-ம் ஆண்டு எனது கணவர் ஒரு புகார் அளிப்பதற்காக புளியங்குடி காவல் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் எனது கணவரின் செல்போனை பறித்து வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டார்.
அதில் இருந்து எனது செல்போன் எண்ணை எடுத்துக்கொண்டு, எனக்கு திடீரென 29 ஆபாச வீடியோக்கள் அனுப்பினார். 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து எனது கணவரிடம் கூறினேன். அவர் 2024-ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகார் வாங்க மறுத்ததோடு எனது கணவரை மிரட்டினர்.
கடந்த 11.12.2025 அன்றும் எனது செல்போன் எண்ணிற்கு மீண்டும் போலீஸ்காரர் ஆபாச வீடியோ அனுப்பினார். அவை அனைத்தையும் தற்போது நான் ‘ஸ்கிரீன் ஷாட்’ ஆதாரமாக எடுத்து வைத்துள்ளேன். அவை அனைத்தையும் பதிவு செய்து மேலதிகாரிகளுக்கு பதிவு தபால் மூலம் அனுப்பினேன். ஆனாலும் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கமல்கிஷோர், இதுகுறித்து உரிய விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். போலீஸ்காரர் மீது இளம்பெண் ஆட்சியரிடம் பாலியல் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)

