» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயர் : இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 9, செப்டம்பர் 2024 3:08:47 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயர் சூட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு : இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் வாஞ்சிநாதன் பங்கேற்றார். ஆங்கிலேயர் ஆட்சியல் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ராபர்ட் ஆஷ். இவர் வ.உ.சிதம்பரனார் சுதேசி நவாப் சங்கம் கப்பல் நிறுவனத்தை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் வாஞ்சிநாதன் அவர்கள் ஆஷின் நடவடிக்கைகளை எதிரித்து வந்தார்.
1911-ம் ஆண்டு ஜீன் மாதம் 17ம் தேதி ஆஷ் துரையை திருநெல்வேலியிலிருந்து மணியாச்சியாக்கி வந்த இரயிலில் ஆஷ் இருந்ததை துரை நேரில் கண்டு தன்னுடைய கைதுப்பாக்கியை வைத்து சுட்டு கொன்றார். ஆங்கிலேயரால் தண்டனை பெறக்கூடாது என்று தன்னைத்தானே சுட்டுக்கொன்றார். இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட அவருக்கு வாஞ்சிமணியாச்சியில் மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
சிதம்பரம்Sep 9, 2024 - 08:32:34 PM | Posted IP 162.1*****
வ.வு.சிதம்பரனார் வானூர்தி நிலையம் பெயர் பொருத்தமாக இருக்கும்.
JOSEPHSep 9, 2024 - 04:59:48 PM | Posted IP 172.7*****
WE ASK THE NAME OF CHIDAMBARANAR AIR PORT
ARASAMUTHUSep 9, 2024 - 03:52:41 PM | Posted IP 172.7*****
VA VU Sidambaranar International Airport
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)

உண்மை விளம்பிSep 9, 2024 - 10:23:18 PM | Posted IP 172.7*****