» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயர் : இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 9, செப்டம்பர் 2024 3:08:47 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயர் சூட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு : இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் வாஞ்சிநாதன் பங்கேற்றார். ஆங்கிலேயர் ஆட்சியல் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ராபர்ட் ஆஷ். இவர் வ.உ.சிதம்பரனார் சுதேசி நவாப் சங்கம் கப்பல் நிறுவனத்தை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் வாஞ்சிநாதன் அவர்கள் ஆஷின் நடவடிக்கைகளை எதிரித்து வந்தார்.
1911-ம் ஆண்டு ஜீன் மாதம் 17ம் தேதி ஆஷ் துரையை திருநெல்வேலியிலிருந்து மணியாச்சியாக்கி வந்த இரயிலில் ஆஷ் இருந்ததை துரை நேரில் கண்டு தன்னுடைய கைதுப்பாக்கியை வைத்து சுட்டு கொன்றார். ஆங்கிலேயரால் தண்டனை பெறக்கூடாது என்று தன்னைத்தானே சுட்டுக்கொன்றார். இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட அவருக்கு வாஞ்சிமணியாச்சியில் மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
சிதம்பரம்Sep 9, 2024 - 08:32:34 PM | Posted IP 162.1*****
வ.வு.சிதம்பரனார் வானூர்தி நிலையம் பெயர் பொருத்தமாக இருக்கும்.
JOSEPHSep 9, 2024 - 04:59:48 PM | Posted IP 172.7*****
WE ASK THE NAME OF CHIDAMBARANAR AIR PORT
ARASAMUTHUSep 9, 2024 - 03:52:41 PM | Posted IP 172.7*****
VA VU Sidambaranar International Airport
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

உண்மை விளம்பிSep 9, 2024 - 10:23:18 PM | Posted IP 172.7*****