» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி : கனிமொழி எம்பி வழங்கினார்!
திங்கள் 9, செப்டம்பர் 2024 5:12:19 PM (IST)

தூத்துக்குடியில் 1,439 பேருக்கு 1,439 பேருக்கு ரூ. 11.62 கோடி கடனுதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் மேளா நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட கடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன், வீட்டு அடமானக் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன், சிறுவணிகர் கடன், சிறு-குறு கடன் என மொத்தம் 1,439 பேருக்கு ரூ. 11.62 கோடி கடனுதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, வங்கி இணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான பொ. நடுக்காட்டுராஜா, பொது மேலாளர் ப. சரவணன், முதன்மை வருவாய் அலுவலர் க. விஜயன், உதவிப் பொது மேலாளர்கள் சீனிவாசன், பூமிசெல்வி, வங்கி மேலாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கக்கடலில் மோந்தா புயல்: நெல்லை, தென்காசிக்கு பலத்த மழை எச்சரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:19:35 AM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் 10 நாட்களுக்கு பிறகு அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 27, அக்டோபர் 2025 8:51:28 AM (IST)

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)





inbaSep 10, 2024 - 08:08:46 AM | Posted IP 172.7*****