» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
புதன் 9, அக்டோபர் 2024 11:35:21 AM (IST)
கூடங்குளத்தில் சி.பி.எஸ்.சி., பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் செட்டிகுளத்தில் அணு மின் நிலைய பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகம் உள்ளது. அங்கு சி.பி.எஸ்.சி., பள்ளி உள்ளது.
நேற்று பள்ளியின் இமெயிலில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவரின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. பள்ளி நிர்வாகம், மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு தெரிவித்தனர். தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். குழந்தைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. இதுகுறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:28:42 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:33:24 AM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி: அறநிலையத்துறை ஊழியர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:27:17 AM (IST)

