» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
புதன் 9, அக்டோபர் 2024 11:35:21 AM (IST)
கூடங்குளத்தில் சி.பி.எஸ்.சி., பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் செட்டிகுளத்தில் அணு மின் நிலைய பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகம் உள்ளது. அங்கு சி.பி.எஸ்.சி., பள்ளி உள்ளது.
நேற்று பள்ளியின் இமெயிலில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவரின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. பள்ளி நிர்வாகம், மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு தெரிவித்தனர். தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். குழந்தைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. இதுகுறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)
