» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
புதன் 9, அக்டோபர் 2024 11:35:21 AM (IST)
கூடங்குளத்தில் சி.பி.எஸ்.சி., பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் செட்டிகுளத்தில் அணு மின் நிலைய பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகம் உள்ளது. அங்கு சி.பி.எஸ்.சி., பள்ளி உள்ளது.
நேற்று பள்ளியின் இமெயிலில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவரின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. பள்ளி நிர்வாகம், மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு தெரிவித்தனர். தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். குழந்தைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. இதுகுறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)




