» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 11:12:17 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலையில் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் புகழ்பெற்ற சிவாலயமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண திருவிழா நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சி திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலை கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவை யொட்டி நேற்று சம்பா நதியில் ஒற்றை காலில் தபசு இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சென்று காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அதன் பிறகு அம்மன் கோவிலில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி திருநீறு பூசி வெண்பட்டு உடுத்தி ஒற்றை காலில் தபசு இருந்த காந்திமதி அம்பாள் மேளதாளம் முழங்க பக்தர்களுக்கு அருள் பாலித்த பிறகு மண்டபத்தில் எழுந்தருளி சுவாமி திருக்காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
நேற்று முதலே நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலையில் இன்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வருகை தந்தனர். நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவிப்பு
புதன் 17, டிசம்பர் 2025 11:09:51 AM (IST)


