» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 11:12:17 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலையில் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் புகழ்பெற்ற சிவாலயமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண திருவிழா நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சி திருக்கல்யாண வைபவம் இன்று அதிகாலை கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவை யொட்டி நேற்று சம்பா நதியில் ஒற்றை காலில் தபசு இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சென்று காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அதன் பிறகு அம்மன் கோவிலில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி திருநீறு பூசி வெண்பட்டு உடுத்தி ஒற்றை காலில் தபசு இருந்த காந்திமதி அம்பாள் மேளதாளம் முழங்க பக்தர்களுக்கு அருள் பாலித்த பிறகு மண்டபத்தில் எழுந்தருளி சுவாமி திருக்காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
நேற்று முதலே நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலையில் இன்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வருகை தந்தனர். நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
