» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முத்தையாபுரம் பாலத்தின் சுவரில் வண்ணம் தீட்டும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வியாழன் 28, நவம்பர் 2024 5:42:16 PM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுண்டானவில் பாலத்தின் சுவரில் வண்ணம் தீட்டும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக முத்தையாபுரம் ரவுண்டானாவில் தூத்துக்குடி மாநகராட்சியும் ஸ்பிக் நிறுவனமும் இணைந்து பாலத்தின் சுவற்றில் வண்ணம் தீட்டும் பணிகளும் பூங்கா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. அந்தப் பணிகளையும் எம்டிஏ காலனி பகுதியில் நடைபெற்று வரும் புதிய பூங்கா பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்றார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா: சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:51:08 PM (IST)

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உண்மை விளம்பிNov 28, 2024 - 11:13:08 PM | Posted IP 172.7*****