» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முத்தையாபுரம் பாலத்தின் சுவரில் வண்ணம் தீட்டும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வியாழன் 28, நவம்பர் 2024 5:42:16 PM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுண்டானவில் பாலத்தின் சுவரில் வண்ணம் தீட்டும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக முத்தையாபுரம் ரவுண்டானாவில் தூத்துக்குடி மாநகராட்சியும் ஸ்பிக் நிறுவனமும் இணைந்து பாலத்தின் சுவற்றில் வண்ணம் தீட்டும் பணிகளும் பூங்கா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. அந்தப் பணிகளையும் எம்டிஏ காலனி பகுதியில் நடைபெற்று வரும் புதிய பூங்கா பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்றார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)

நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)


உண்மை விளம்பிNov 28, 2024 - 11:13:08 PM | Posted IP 172.7*****