» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முதியவர் கொலை குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை : தென்காசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வெள்ளி 29, நவம்பர் 2024 8:24:08 AM (IST)
முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட மேல மெஞ்ஞானபுரம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சாமுவேல் துரைபாண்டி(70) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேல மெஞ்ஞானபுரம் கோவிந்தராஜ் என்பவரின் மகன் ஏழுமலை (45) என்பவரை குற்றாலம் காவல் துறையினர கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி மனோஜ் குமார் குற்றவாளி ஏழுமலைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த குற்றாலம் காவல்துறை யினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோட்டத்தில் கேந்தி பூக்களை டிராக்டர் ஏற்றி அழித்த விவசாயி : விலை வீழ்ச்சியால் விரக்தி
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:29:00 AM (IST)

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் : சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்
சனி 3, ஜனவரி 2026 4:19:36 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு : கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 3, ஜனவரி 2026 12:38:11 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் புதிய வெள்ளித் தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!
சனி 3, ஜனவரி 2026 12:25:43 PM (IST)

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 3, ஜனவரி 2026 10:42:24 AM (IST)

அந்தியோதயா ரயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு : பெண் பயணி காயம்!
சனி 3, ஜனவரி 2026 8:22:47 AM (IST)


