» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு பேருந்து - தாசில்தார் ஜீப் நேருக்கு நேர் மோதல் : டிரைவர் காயம்!
வெள்ளி 6, டிசம்பர் 2024 5:36:35 PM (IST)
கடையநல்லூர் அருகே தாசில்தார் ஜீப்பும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தாசில்தார் டிரைவர் காயம் அடைந்தார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே புன்னையாபுரம் பகுதியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையத்திலிருந்து தென்காசி நோக்கி விரைந்து வந்த அரசு பஸ் புன்னையாபுரம் பெட்ரோல் பல்க் அருகே வந்த பொழுது கடையநல்லூரில் இருந்து புளியங்குடியை நோக்கி விரைந்து சென்ற கடையநல்லூர் தாசில்தார் ஜீப் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தி் ஜீப்பை ஒட்டி வந்த டிரைவர் மாரிமுத்துப்பாண்டி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)
