» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாகர்மித்ரா பணியாளர்களாக விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்
செவ்வாய் 31, டிசம்பர் 2024 3:09:21 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீனவர்நலத் துறையில் சாகர்மித்ரா பணியாளர்களாக பணிபுரிந்திட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்நோக்கு சேவை ஊழியர்களாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி மற்றும் பழையகாயல் மீனவ கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறையில் சாகர்மித்ரா பணியாளர்களாக பணிபுரிந்திட 01.07.2024 அன்றைய தேதியில் 35 வயது நிறைவடையாத மீன்வள அறிவியல் (Fisheries Science) / கடல் உயிரியல் (Marine Biology) /விலங்கியல் (Zoology) பட்டப்படிப்பு / பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று தூத்துக்குடி வடக்கு மற்றும் வேம்பார் மீனவ கிராம சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் தகுதியான நபர்கள் 07.01.2025 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)


Pravin kumar.sJan 7, 2025 - 06:55:06 PM | Posted IP 172.7*****