» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கணவருடன் பைக்கில் சென்றபோது சாலையில் தவறி விழுந்த பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலி!!
வெள்ளி 10, ஜனவரி 2025 8:37:49 AM (IST)
செங்கோட்டையில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையில் தவறி விழுந்த பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழிலாளியான இவரது மனைவி முப்புடாதி (40). இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார். முருகேசனின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு தென்காசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை பார்ப்பதற்காக முருகேசன் தனது மனைவி முப்புடாதியுடன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தாயை பார்த்து விட்டு 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். செங்கோட்டை பழைய சினிமா தியேட்டர் அருகில் மெயின் ரோட்டில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் திடீரென்று நிலைதடுமாறியது. இதில் 2 பேரும் தவறி கீழே விழுந்தனர்.
அந்த சமயத்தில் பின்னால் இருந்து கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியின் சக்கரம் கண்இமைக்கும் நேரத்தில் முப்புடாதி தலையில் ஏறிஇறங்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த முருகேசன் அதிர்ச்சி அடைந்து அலறினாா். இந்த விபத்து குறித்து செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முப்புடாதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)
