» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 11, ஜனவரி 2025 10:03:27 AM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 15.01.2025 (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA & FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.01.2025 (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் நவ.1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:37:25 AM (IST)

கூட்டணிக்கு மறுத்தால் விஜய் மீதும் சி.பி.ஐ. வழக்கு தொடரும் : நெல்லையில் சீமான் பேட்டி!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:10:51 PM (IST)

நெல்லை மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:21:12 AM (IST)

வங்கக்கடலில் மோந்தா புயல்: நெல்லை, தென்காசிக்கு பலத்த மழை எச்சரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:19:35 AM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் 10 நாட்களுக்கு பிறகு அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 27, அக்டோபர் 2025 8:51:28 AM (IST)




