» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கியது
வியாழன் 22, ஜனவரி 2026 5:39:39 PM (IST)

பாரதியார் தின மற்றும் குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் திருநெல்வேலி சீவலப்பேரி நீச்சல் வளாகத்தில் தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் வளாகத்தில் இன்று (22.01.2025) பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவில் நடைபெறும் பாரதியார் தின மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவகுமார் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அளவில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெறுவதற்காக மாநில அளவிலான போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளி அளவிலான வருவாய் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட நீச்சல் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான நடைபெறும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளார்கள். இன்று முதல் 25.01.2026 வரை 4 நாட்கள் நடைபெறும் 47 வகையான பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்றும், நாளையும் (23.01.2026) மாணவிகளுக்கான போட்டிகளில் 1471 மாணவிகளும், 24.01.2026 மற்றும் 25.01.2026 மாணவர்களுக்கான போட்டிகளில் 2172 மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட நீச்சல் வீரர் பன்னாட்டு அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் M.S.நித்தீஷ் கலந்து கொண்டார். பென்டன் ரோகித் 50 மீட்டர் பட்டர்பிளை தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். இதுபோன்று பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) இ.ராமசாமி, திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சாய் சுப்புலட்சுமி, வள்ளியூர், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) திருமுத்துராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சிவராஜ், தமிழ்நாடு நீர்நிலை விளையாட்டுக் கழகத் தலைவர் முனைவர் சேதுதிருமாறன், திருநெல்வேலி மாவட்ட நீச்சல் சங்கத்தின் செயலாளர் லட்சுமணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா 24ஆம் தேதி தொடங்குகிறது!
வியாழன் 22, ஜனவரி 2026 3:56:16 PM (IST)

நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு: தந்தை-மகன் கைது
வியாழன் 22, ஜனவரி 2026 8:10:07 AM (IST)

ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.6 லட்சம் பொருட்கள் மீட்பு: துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு!
வியாழன் 22, ஜனவரி 2026 8:08:40 AM (IST)

சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி
புதன் 21, ஜனவரி 2026 8:28:01 PM (IST)

திருநெல்வேலியில் 1.3 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது: பைக் பறிமுதல்!
புதன் 21, ஜனவரி 2026 5:02:15 PM (IST)

நெல்லையில் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
புதன் 21, ஜனவரி 2026 3:32:52 PM (IST)

