» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பஸ்சில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் கைது!

திங்கள் 3, பிப்ரவரி 2025 9:09:27 PM (IST)

நெல்லை அருகே பஸ்சில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே உள்ள மணப்படைவீடு பகுதியில் இருந்து சம்பவத்தன்று காலையில் அரசு பஸ் ஒன்று நெல்லை சந்திப்பிற்கு புறப்பட்டது. அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் தனது தாயாருடன் ஏறினார். அப்போது அவர்களுக்கு பின்னால் அமர்ந்து இருந்த நபர் ஒருவர் அந்த இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முத்துபட்டன் (40) என்பதும் கொத்தனார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory