» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நிதின் கட்கரியுடன் கனிமொழி எம்பி சந்திப்பு: தூத்துக்குடி நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை!
புதன் 12, மார்ச் 2025 5:14:30 PM (IST)

தூத்துக்குடியில் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கனிமொழி எம்பி மனு அளித்தார்.
டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்.பி., கனிமொழி சந்திப்பு மேற்கொண்டார். அப்போது அவர் அளித்தம மனுவில், "எனது தொகுதியான தூத்துக்குடியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள சாலைகளில் பல்வேறு பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மதுரை-தூத்துக்குடி பிரிவு NH-38 (பழைய NH-45B) நான்கு வழிச் சாலையில் பல இடங்கள் சேத் அடைந்துள்ளன. மேலும் இது பொதுமக்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. மதுரை-தூத்துக்குடி பிரிவு NH 38 இல், துரைசாமிபுரம், கீழ ஏரல், குருகுச்சாலை ஆகிய இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனை 2015-18 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டாலும், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.
எனவே, பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பல விபத்துகளையும் தவிர்க்கும். எனவே, மதுரை-தூத்துக்குடி NH-38 பிரிவில் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
SeenivasagamMar 13, 2025 - 06:40:26 AM | Posted IP 162.1*****
தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் சாலை மிகவும் மோசமாக உள்ளது யாரும் கண்டு கொள்வதில்லை அமைச்சர் கள் நெடும்சாலை துறை தூங்குகிறதா
PublicMar 12, 2025 - 09:02:50 PM | Posted IP 172.7*****
Tuticorin to Vanchi Maniyachi road announced 12 years before still not yet started rural road around 40 KM. Have a look first
MAKKALMar 12, 2025 - 06:18:16 PM | Posted IP 162.1*****
APPADIYE TUTICORIN THIRUCHENDUR ROAD SARI PANNA SOLLI UNGA ANNA KITTA YEPPOM MANU KODUKKA PORINGA
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)

கடந்த 3 மாதங்களில் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ள தென் மாவட்டங்கள்!
திங்கள் 24, மார்ச் 2025 8:32:18 PM (IST)

அதுMar 14, 2025 - 08:43:40 AM | Posted IP 162.1*****