» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்காக இன்று கால்கோள் விழா நடைபெற்றது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்கான கால்கோள் விழா சுவாமி சன்னதி முன்பு இன்று காலை நடைபெற்றது. கால் கோள் விழாவை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் ஆட்சியர் கமல் கிஷோர், அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் ஆகியோர் கால்கோள் நட்டினார்கள். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பொன்னி, அறங்காவலர் உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
