» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்காக இன்று கால்கோள் விழா நடைபெற்றது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்கான கால்கோள் விழா சுவாமி சன்னதி முன்பு இன்று காலை நடைபெற்றது. கால் கோள் விழாவை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் ஆட்சியர் கமல் கிஷோர், அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் ஆகியோர் கால்கோள் நட்டினார்கள். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பொன்னி, அறங்காவலர் உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, மார்ச் 2025 8:39:51 AM (IST)

மிக கனமழை எச்சரிக்கை முன்னேற்பாடு பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
திங்கள் 10, மார்ச் 2025 7:59:52 PM (IST)

போலீஸ் ஏட்டு மனைவிக்கு பாலியல் தொந்தரவு: சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது
ஞாயிறு 9, மார்ச் 2025 7:18:06 PM (IST)

அம்பை தலைமை அஞ்சலகத்தில் சர்வதேச மகளிர் தினம்
ஞாயிறு 9, மார்ச் 2025 9:04:29 AM (IST)
