» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்காக இன்று கால்கோள் விழா நடைபெற்றது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்கான கால்கோள் விழா சுவாமி சன்னதி முன்பு இன்று காலை நடைபெற்றது. கால் கோள் விழாவை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் ஆட்சியர் கமல் கிஷோர், அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் ஆகியோர் கால்கோள் நட்டினார்கள். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பொன்னி, அறங்காவலர் உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 12:16:08 PM (IST)

கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் சபாநாயகர் மு.அப்பாவு..!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:28:14 AM (IST)

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த வாலிபர் கைது
வெள்ளி 28, நவம்பர் 2025 8:38:33 AM (IST)

தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : திமுக வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்!
வெள்ளி 28, நவம்பர் 2025 7:52:04 AM (IST)

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி இடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 27, நவம்பர் 2025 5:06:22 PM (IST)

குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
வியாழன் 27, நவம்பர் 2025 4:24:35 PM (IST)




