» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்
சனி 12, ஏப்ரல் 2025 8:31:50 PM (IST)

பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் தேரோட்ட திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தளங்களில் ஒன்றான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாளையங்கோட்டையில் உள்ள அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோத்ஸவ திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோத்ஸவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி கடந்த 3-ந்தேதி காலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கொடியேற்றியதும் மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் தோளுக்கினியானில் ருக்மணி சத்யபாமா, ராஜகோபாலன் வீதியுலா நடைபெறுகிறது.
தொடர்ந்து 4-ந்தேதி இரவு 7 மணிக்கு யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்திலும், 5-ந்தேதி ராமர் அலங்காரத்தில் அனுமன் வாகனத்திலும், 6-ந்தேதி பரமபத நாதன் அலங்காரத்தில் ஆதிசேஷ வாகனத்திலும், 7-ந்தேதி வைகுண்டநாதன் அலங்காரத்தில் இரட்டை கருட சேவையிலும் பெருமாள் திருவீதியுலா வந்தார்.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக தேரோட்டத்தை முன்னிட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபாலர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். பின்னர் தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நான்கு ரத வீதிகளிலும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் கோவிந்தா கோபாலா கரகோஷம் விண்ணதிர முழங்கினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)
