» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
செங்கோட்டையில் வாழ்ந்து காட்டுவோம் பயிலரங்கம்
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:07:23 PM (IST)

செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு எஸ். எஸ் ஆர்கானிக் கார்டனில் வாழ்ந்து காட்டுவோம் பயிலரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமையேற்றஎஸ் எஸ் ஆர்கானிக் கார்டனின் நிர்வாக இயக்குனர் பணி நிறைவு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் வரவேற்புரை நிகழ்த்திபயிலரங்கத்தின் நோக்கம் பற்றி விளக்கினார்.
பணி நிறைவு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியம் இலக்கு, வெற்றிப் பயணம், கடின உழைப்பு,ஒழுக்கம், சுய கட்டுப்பாடுஉள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்றியதோடுகல்வி கற்கும் காலங்களில் மாணவர்கள் தங்களுடைய எதிர்கால திட்டங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும் நவீன போட்டி உலகத்தில் மாணவர்கள் தங்களுடைய ஆற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி விளக்கி கூறினார்
படி -எழுது என்ற தலைப்பில் விழுதுகள் அறக்கட்டளையின் தலைவர் சேகர் *உரையாற்றினார்.மகிழ்ந்து வாழ் என்ற தலைப்பில் கவிதை பாடி கவிஞர் தளவாய் இளங்குமரன் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தூங்கு எழு என்ற தலைப்பில் முன்னோடி விவசாயி செல்லத்துரை விளக்கி கூறினார்
நுண் கீரை வளர்ப்பு, வளர்ந்து வரும் சமூகத்தின் உணவு பழக்க வழக்கம் என்ற தலைப்பில் முன்னாள் வேளாண்மை ஆசிரியர் கோவில்பட்டி சுரேஷ்குமார் உரையாற்றினார். கடின உழைப்பும் வெற்றியும் என்ற தலைப்பில் பார்டர் ரஹ்மத் ஹோட்டல் நிர்வாக இயக்குனர் முகமது அசன் உரையாற்றினார். பண்ணை மேற்பார்வையாளர் அருண்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பலவேசம் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)
