» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
செங்கோட்டையில் வாழ்ந்து காட்டுவோம் பயிலரங்கம்
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:07:23 PM (IST)

செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு எஸ். எஸ் ஆர்கானிக் கார்டனில் வாழ்ந்து காட்டுவோம் பயிலரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமையேற்றஎஸ் எஸ் ஆர்கானிக் கார்டனின் நிர்வாக இயக்குனர் பணி நிறைவு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் வரவேற்புரை நிகழ்த்திபயிலரங்கத்தின் நோக்கம் பற்றி விளக்கினார்.
பணி நிறைவு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியம் இலக்கு, வெற்றிப் பயணம், கடின உழைப்பு,ஒழுக்கம், சுய கட்டுப்பாடுஉள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்றியதோடுகல்வி கற்கும் காலங்களில் மாணவர்கள் தங்களுடைய எதிர்கால திட்டங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும் நவீன போட்டி உலகத்தில் மாணவர்கள் தங்களுடைய ஆற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி விளக்கி கூறினார்
படி -எழுது என்ற தலைப்பில் விழுதுகள் அறக்கட்டளையின் தலைவர் சேகர் *உரையாற்றினார்.மகிழ்ந்து வாழ் என்ற தலைப்பில் கவிதை பாடி கவிஞர் தளவாய் இளங்குமரன் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தூங்கு எழு என்ற தலைப்பில் முன்னோடி விவசாயி செல்லத்துரை விளக்கி கூறினார்
நுண் கீரை வளர்ப்பு, வளர்ந்து வரும் சமூகத்தின் உணவு பழக்க வழக்கம் என்ற தலைப்பில் முன்னாள் வேளாண்மை ஆசிரியர் கோவில்பட்டி சுரேஷ்குமார் உரையாற்றினார். கடின உழைப்பும் வெற்றியும் என்ற தலைப்பில் பார்டர் ரஹ்மத் ஹோட்டல் நிர்வாக இயக்குனர் முகமது அசன் உரையாற்றினார். பண்ணை மேற்பார்வையாளர் அருண்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பலவேசம் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
