» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)
வள்ளியூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு ஆறுபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (70). இவரது கணவர் ஞானபிரகாசம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் அன்னம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்க சென்றார்.
அப்போது, வீட்டின் கதவை மர்மநபர்கள் தட்டினர். ஆனால் அவர் திறக்காததால், வீட்டின் ஜன்னலை உடைத்து 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அன்னம்மாளை மிரட்டி, அவர் காதில் அணிந்திருந்த 3 கிராம் தங்க கம்மல், ரூ.1,000 ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். நேற்று காலையில் அக்கம் பக்கத்தினருக்கு நடந்த சம்பவத்தை அன்னம்மாள் கூறினார்.
அவர்கள் உடனடியாக வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:10:16 PM (IST)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:28:42 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:33:24 AM (IST)

