» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)
திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் ஹுசேன் (61). நிலம் தொடர்பான பிரச்னையால், மார்ச் 18ல் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவ்பிக், மனைவி நுார்னிஷா உள்ளிட்டோரை போலீசார் தேடிவந்தனர்.
இதில் முகமது தவ்பிக் போலீசாரால் சுட்டு கைது செய்யப்பட்டார். ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நுார்னிஷா, நேற்று தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு, இரவு நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது தவ்பிக், அக்பர் ஷா, பீர்முகமது, கார்த்திக் என்ற அலிஷேக் ஆகியோர் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செல்போன் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ஞாயிறு 18, மே 2025 9:07:08 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு
ஞாயிறு 18, மே 2025 9:04:32 PM (IST)

நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை
ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு: ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது!
சனி 17, மே 2025 12:22:27 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் மின்தடை: மின்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
சனி 17, மே 2025 11:14:31 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு!
வெள்ளி 16, மே 2025 4:09:33 PM (IST)
