» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத்தில் 185 வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர். 2024 - 25 ஆண்டிற்கான நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை சங்க விதிகளின்படி 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியலை பின்பற்றாமல் 2025 மார்ச் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையர் ஒருவரையும் நியமித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
நாங்குநேரி வழக்கறிஞர்கள் சங்க 2024- 25 தேர்தலில் 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் ஆணையரை நியமிக்க கோரியும் நாங்குநேரி வழக்கறிஞர் ஏ.சி.பேச்சிமுத்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை, தேர்தல் ஆணையராக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி. சுகுமாரை நியமித்தும், 2024 டிசம்பர் 31 தேதிக்குரிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தேர்தலை நடத்திடவும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)

போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
சனி 26, ஏப்ரல் 2025 10:31:17 AM (IST)

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)

திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமை யாருக்கு? பொது அறிவிப்பு வெளியீடு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 3:53:52 PM (IST)
