» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
திங்கள் 5, மே 2025 5:48:34 PM (IST)
தூத்துக்குடி அருகே பட்டா பெயர் மாற்றுவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

அந்த விண்ணப்பம் இருமுறை நிராகரிக்கப்பட்டதாம். தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி (42), என்பவர் சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவர் பட்டா மாறுதலுக்கு பிரபாகரனிடம் ரூ.3ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து பிரபாகரன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து டிஎஸ்பி பீட்டர் பால் அறிவுறுத்தலின் பேரில் விஏஓ அலுவலகத்தில் வைத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வி.ஓ.ஓ., கணேச மூர்த்தியிடம் பிரபாகரன் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

Babuமே 7, 2025 - 11:33:51 PM | Posted IP 162.1*****