» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

திருநெல்வேலி மாநகர சுற்று பகுதிகளிலுள்ள குளங்களில் அமலைச் செடிகளை அகற்றுவது தொடர்பாக மாவட்டஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குளங்களில் அமலைச் செடிகளை அகற்றுவது மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், இன்று (06.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி மூளிக்குளம், உடையார்பட்டிகுளம், வழுக்கொடை, கண்டியப்பேரி, கிருஷ்ணபேரி, இலந்தைகுளம், தேனீர்குளம், சத்திரம்புதுக்குளம், செட்டிகுளம், அழகனேரி, பிராயன்குளம் போன்ற குளங்களில் அமலைச் செடிகளை அகற்றி, குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு தண்ணீர் செல்லும் இடங்களை முன்கூட்டியே தேர்வு செய்து தேவையான பராமரிப்பு பணிகளையும், நீர்நிலைகளுக்கு தண்ணீர் தடையின்றி செல்வதற்கும், நீரைத் தேக்கி வைப்பதற்கும், தேவையான இடங்களில் கரைகளை பலப்படுத்துவதற்கான பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டுமென்று நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
ஆய்வில், திருநெல்வேலி மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நகர்நல அலுவலர் ராணி , நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் ரமேஷ் , செண்பகநந்தினி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜன.10, 11ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

திருநெல்வேலியில் ஜன.21ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
வெள்ளி 9, ஜனவரி 2026 12:03:38 PM (IST)

பேட்டை சரக்கு வாகன முனையம், விற்பனை சந்தையில் ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:56:00 AM (IST)

பாஜக நிர்வாகியின் வீடு புகுந்து ரூ.26 லட்சம் நகை-பணம் கொள்ளை: நெல்லை அருகே துணிகரம்!
வெள்ளி 9, ஜனவரி 2026 8:23:56 AM (IST)

நெல்லை மருத்துவ மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை
வியாழன் 8, ஜனவரி 2026 8:13:47 AM (IST)

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: இருவர் கைது
வியாழன் 8, ஜனவரி 2026 7:59:54 AM (IST)

