» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பேட்டை சரக்கு வாகன முனையம், விற்பனை சந்தையில் ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:56:00 AM (IST)

திருநெல்வேலி பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள நயினார்குளம் சாலை மற்றும் இதர இடங்களில் போக்குவரத்தினை கட்டப்படுத்தும் பொருட்டு மாநகராட்சி பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நேற்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. பழையபேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் வியாபாரிகள் சங்கம் மூலம் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விற்பனையை தொடங்கியுள்ளனர்.
பொதுமக்கள் இம்முனையத்திற்கு எளிதாக வந்து பொருட்கள் மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் வாங்கி செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கரும்புகள் இம்முனையத்திற்கு விற்பனைக்கு வரவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இம்முனையத்திற்கு வந்து வாங்கி வியாபாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள நயினார்குளம் சாலை மற்றும் இதர இடங்களில் போக்குவரத்தினை கட்டப்படுத்தும் பொருட்டு மாநகராட்சி பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நேற்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. பழையபேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் வியாபாரிகள் சங்கம் மூலம் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விற்பனையை தொடங்கியுள்ளனர்.
பொதுமக்கள் இம்முனையத்திற்கு எளிதாக வந்து பொருட்கள் மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் வாங்கி செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கரும்புகள் இம்முனையத்திற்கு விற்பனைக்கு வரவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இம்முனையத்திற்கு வந்து வாங்கி வியாபாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜன.10, 11ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

திருநெல்வேலியில் ஜன.21ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
வெள்ளி 9, ஜனவரி 2026 12:03:38 PM (IST)

பாஜக நிர்வாகியின் வீடு புகுந்து ரூ.26 லட்சம் நகை-பணம் கொள்ளை: நெல்லை அருகே துணிகரம்!
வெள்ளி 9, ஜனவரி 2026 8:23:56 AM (IST)

நெல்லை மருத்துவ மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை
வியாழன் 8, ஜனவரி 2026 8:13:47 AM (IST)

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: இருவர் கைது
வியாழன் 8, ஜனவரி 2026 7:59:54 AM (IST)

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

