» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது : பைக் பறிமுதல்
வெள்ளி 9, மே 2025 8:20:51 AM (IST)
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சிவகளையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி பேச்சியம்மாள்(33). இவர் தனது சொந்த ஊரான தெய்வச்செயல்புரத்தில் நடைபெற்ற கோயில் கொடைவிழாவில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு கீழத் தெரு வழியாக நடந்து வந்துகொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர், பேச்சியம்மாள் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், தாளமுத்துநகர் சிலுவைப்பட்டியை சேர்ந்த சிலுவைராஜ் மகன் அந்தோணி லாசர்(32) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, நகையை மீட்டதுடன், பைக்கை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செல்போன் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ஞாயிறு 18, மே 2025 9:07:08 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு
ஞாயிறு 18, மே 2025 9:04:32 PM (IST)

நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை
ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு: ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது!
சனி 17, மே 2025 12:22:27 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் மின்தடை: மின்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
சனி 17, மே 2025 11:14:31 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு!
வெள்ளி 16, மே 2025 4:09:33 PM (IST)

ஆதி திருவைகுண்டம்மே 9, 2025 - 09:15:35 AM | Posted IP 172.7*****