» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது : பைக் பறிமுதல்

வெள்ளி 9, மே 2025 8:20:51 AM (IST)

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சிவகளையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி பேச்சியம்மாள்(33). இவர் தனது சொந்த ஊரான தெய்வச்செயல்புரத்தில் நடைபெற்ற கோயில் கொடைவிழாவில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு கீழத் தெரு வழியாக நடந்து வந்துகொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர், பேச்சியம்மாள் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், தாளமுத்துநகர் சிலுவைப்பட்டியை சேர்ந்த சிலுவைராஜ் மகன் அந்தோணி லாசர்(32) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, நகையை மீட்டதுடன், பைக்கை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து

ஆதி திருவைகுண்டம்மே 9, 2025 - 09:15:35 AM | Posted IP 172.7*****

ஸ்ரீவைகுண்டம் உள்ளே வந்து விட்டு செல்வதனால் காலதாமதம் ஆகிறது என்பது அப்பட்டமான பொய்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory