» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி : புதிய தயாரிப்புகளை ஆட்சியர் வெளியிட்டார்!

சனி 24, மே 2025 5:28:05 PM (IST)



திருநெல்வேலியில் நேரடி நுகர்வோர் வர்த்தகம், மின்வணிகம் உள்ளிட்ட தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் புதிய தயாரிப்புகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்டார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இணைந்து வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்முனைவோர், நேரடி நுகர்வோர் வர்த்தகம் மற்றும் மின்வணிகம் செய்யும் தொழில்முனைவோர்களுக்கு இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், புதிய தயாரிப்புகளை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இணையதளம் அல்லது செயலிகள் மூலமாக பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பது, ஒரு நிறுவனத்தின் பெயர், லோகோ, நம்பிக்கை, தரம் போன்றவற்றின் அடிப்படையில் அதை மக்கள் மனதில் நிலைநிறுத்தும் செயல்முறை, வணிகமாதிரி உருவாக்கம் (Business மோடெல்லிங்) நிதி மாதிரி கட்டமைப்பு (Financial மோடெல்லிங்), ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகள், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் ஆகிய தலைப்புகளில் அதுசார்ந்த நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களால் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டார்கள்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், கலந்து கொண்டு, புதிய தயாரிப்புகளை வெளியிட்டு, தெரிவிக்கையில்: இரண்டு நாட்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் நிறைவு விழாவில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து, மாதந்தோறும் இத்தகைய திறன் மேம்பாட்டு பயிற்சியினை நடத்தவுள்ளது. 

தொழில்முனைவோர் தங்களுடைய வணிக திறனையும் அதற்கான வாய்ப்புகளையும் மேம்படுத்த வேண்டும். தங்களின் தொடக்க முயற்சிகளில் லாப நிகர நிலையை விரைவில் அடைய வேண்டும். தங்களுடைய வணிக முயற்சியினை பாதி வழியில் கைவிடக்கூடாது. தொழில்கள் தொடர்ந்து வளர வேண்டிய தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முக்கியத்துவமான ஒரு பகுதியாக, இந்த தயாரிப்புகள் இங்கு பயிற்சி பெற்ற சிறந்த புத்தொழில் நிறுவனங்களால் மற்றும் உழைப்பாளர்களின் முயற்சியின் விளைவாக உருவானவை. இவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உள்ளுர் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பயிற்சி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க சிறப்புத் துணைத் தலைவர் ஸ்டாலின் ஜேக்கப், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் திருநெல்வேலி மண்டலம் மேலாளர் ராகுல், தூத்துக்குடி மண்டல மேலாளர் ஜிஜின்துரை, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் மூத்த திட்ட மேலாளர் கவிமுகில் மற்றும் அர்ச்சனா, ப்ராண்ட்மிண்ட்ஸ் நிறுவனர் வசந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory