» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் 1 கிலோ போதை சாக்லேட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!

செவ்வாய் 3, ஜூன் 2025 5:29:08 PM (IST)

திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகே 1 கிலோ போதை சாக்லேட் வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு தனியார் மாவு மில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரையும் போலீசார் சோதனை செய்து பார்த்தனர். 

அப்போது அவர்கள் 1 கிலோ 50 கிராம் எடை கொண்ட போதை சாக்லேட் மற்றும் 6 மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சப்-இன்ஸ்பெக்டர் மேற்சொன்ன 3 பேரையும் கங்கைகொண்டான் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆலங்குளம், அருணாச்சலபுரம், தெற்குத் தெருவை சேர்ந்த முருகேசன் (28), ராஜாஜி(25), ரமேஷ்(24) ஆகிய 3 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory