» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீடுபுகுந்து பெண் கழுத்தை அறுத்துக் கொலை : தோல் வியாபாரி கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:47:10 PM (IST)
பாவூர்சத்திரம் அருகே வீடுபுகுந்து பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற வழக்கில் தோல் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

அப்போது வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்மநபர் திடீரென்று உமாவை கழுத்தை அறுத்துக்கொலை செய்து விட்டு தப்பி சென்றார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே உமாவின் கணவர் பரமசிவன் போலீசில் புகார் மனு அளித்தார். அதில், எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தோல் வியாபாரியான மணிகுமார் (44) எனது மனைவி உமாவிடம் நட்பாக பழகி வந்தார்.
பின்னர் உமா, மணிகுமாரிடம் பழகுவதை நிறுத்தி விட்டார். தொடர்ந்து மணிகுமார் தன்னிடம் மீண்டும் பழகுமாறு உமாவிடம் தொல்லை கொடுத்து மிரட்டி வந்தார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க இருந்தேன். இதனை அறிந்த மணிகுமார் வீடுபுகுந்து உமாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து தலைமறைவான மணிகுமாரை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற தோல் வியாபாரி மணிகுமாரை பாவூர்சத்திரம் போலீசார் சற்று முன் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கஞ்சா, அடிதடி, வழிப்பறி வழக்குகளில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வியாழன் 5, ஜூன் 2025 4:21:55 PM (IST)

அரசு அலுவலகங்களில் கழிவுகள் சேகரித்து மறுசுழற்சி திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:34:46 PM (IST)

குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு சீருடைகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
புதன் 4, ஜூன் 2025 4:19:00 PM (IST)

நெல்லையில் 1 கிலோ போதை சாக்லேட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!
செவ்வாய் 3, ஜூன் 2025 5:29:08 PM (IST)

காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகள் திருட்டு: 3 பேர் கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:25:58 PM (IST)

முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம்: ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவு
திங்கள் 2, ஜூன் 2025 5:52:19 PM (IST)
