» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது : சமூக ஆர்வலருக்கு சபாநாயகர் பாராட்டு!
திங்கள் 9, ஜூன் 2025 3:46:14 PM (IST)

முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற சமூக ஆர்வலருக்கு தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் மு.அப்பாவு பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 05.06.2025 அன்று நீர்நிலை பாதுகாப்பில் தன்னிகரற்று பணியாற்றியமைக்காக வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த ஆ.லூர்துராஜ் அவர்களுக்கு முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது - 2025யினை வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09.06.2025) முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற சமூக ஆர்வலரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், முன்னிலையில் சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த ஆ.லூர்துராஜ் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக கல்லிடைக்குறிச்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறார். ஆற்றில் கிடக்கும் துணிகளை எடுப்பது, ஆற்று ஓரமாக மரங்களை நட்டு ஆற்றோர சோலைகளாக உருவாக்குவது போன்ற பணிகளை கல்லிடைக்குறிச்சியில் உள்ள தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகின்றார். மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.06.2025 அன்று முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது மற்றும் ரூ.1 இலட்சத்திற்கான காசோலை ஊக்கதொகையாக வழங்கப்பட்டது.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்நிலை பாதுகாப்பில் தன்னிகரற்று பணியாற்றியமைக்காக ஆ.லூர்துராஜ் அவர்களை நேரில் அழைத்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், முன்னிலையில் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந.சரவணன், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)


