» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது : சமூக ஆர்வலருக்கு சபாநாயகர் பாராட்டு!
திங்கள் 9, ஜூன் 2025 3:46:14 PM (IST)

முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற சமூக ஆர்வலருக்கு தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் மு.அப்பாவு பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 05.06.2025 அன்று நீர்நிலை பாதுகாப்பில் தன்னிகரற்று பணியாற்றியமைக்காக வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த ஆ.லூர்துராஜ் அவர்களுக்கு முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது - 2025யினை வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09.06.2025) முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற சமூக ஆர்வலரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், முன்னிலையில் சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த ஆ.லூர்துராஜ் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக கல்லிடைக்குறிச்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறார். ஆற்றில் கிடக்கும் துணிகளை எடுப்பது, ஆற்று ஓரமாக மரங்களை நட்டு ஆற்றோர சோலைகளாக உருவாக்குவது போன்ற பணிகளை கல்லிடைக்குறிச்சியில் உள்ள தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகின்றார். மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.06.2025 அன்று முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது மற்றும் ரூ.1 இலட்சத்திற்கான காசோலை ஊக்கதொகையாக வழங்கப்பட்டது.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்நிலை பாதுகாப்பில் தன்னிகரற்று பணியாற்றியமைக்காக ஆ.லூர்துராஜ் அவர்களை நேரில் அழைத்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், முன்னிலையில் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந.சரவணன், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவில் திருவிழாவில் சாதிய அடையாளங்கள் இருக்க கூடாது: உயர்நீதிமன்றம்
வெள்ளி 27, ஜூன் 2025 3:58:10 PM (IST)

தொழில் மைய அலுவலகத்தில் வாகனங்கள் ஏலம் : ஜூலை 14 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 3:28:34 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்திற்கு கடன் இலக்கீடாக ரூ.20360.78 கோடி நிர்ணயம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 27, ஜூன் 2025 12:44:55 PM (IST)

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்!!
வெள்ளி 27, ஜூன் 2025 10:24:18 AM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வியாழன் 26, ஜூன் 2025 3:54:36 PM (IST)

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக அருவிகளில் குளிக்க தடை!
வியாழன் 26, ஜூன் 2025 11:06:06 AM (IST)
