» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நகைக்காக இளம்பெண்ணை கொன்று உடலை கால்வாயில் வீசிய கொடூரம்: 4 பேர் கைது!
செவ்வாய் 17, ஜூன் 2025 9:01:52 AM (IST)
சேரன்மாதேவி அருகே 8 மாதங்களுக்கு முன் இளம்பெண் மாயமான வழக்கில் துப்பு துலங்கியது. அவரை நகைக்காக கொன்று உடலை கால்வாயில் வீசிய சாமியார் உள்பட 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவருடைய மகள் கயல்விழி (28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். கடந்த 5.10.2024 அன்று கயல்விழி கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றார். பின்னர் அவர் திரும்பி வராமல் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த 8 மாதங்களாக துப்பு துலங்காத இந்த வழக்கில், வள்ளியூர் துைண எஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். கயல்விழியிடம் செல்போனில் பேசியவர்களின் விவரங்களையும் சேகரித்து விசாரித்தனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த சாமியாரான சிவசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், சிவசாமி நகைக்காக கயல்விழியை கூட்டாளிகளுடன் சேர்ந்து கழுத்தை ெநரித்து கொலை செய்து உடலை கால்வாயில் வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு: கணவரை பிரிந்து வாழ்ந்த கயல்விழியை மீண்டும் கணவருடன் சேர்த்து வாழ வைப்பதாக சாமியார் சிவசாமி கூறினார். இதற்காக அவர் மாந்திரீக பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி, கயல்விழியிடம் பலமுைற பணம் பெற்றுள்ளார். இவ்வாறு மொத்தம் ரூ.5 லட்சம் வரையிலும் அவர் பணம் வாங்கினார்.
ஆனாலும் கயல்விழி கணவருடன் சேர்ந்து வாழாததால் தனது பணத்தை திருப்பி தருமாறு சிவசாமியிடம் அடிக்கடி கேட்டு வந்தார். எனவே, கயல்விழியை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்யவும், அவரது நகைகளை பறிக்கவும் திட்டம் தீட்டினார். சம்பவத்தன்று கயல்விழியை சுசீந்திரத்துக்கு வரவழைத்தனர். அங்கு சிவசாமி, அவருடைய சகோதரி மகனான தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த மாயாண்டி ராஜா, வீரவநல்லூரைச் ேசர்ந்த கண்ணன், கொட்டாரத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரி ஆகிய 4 பேரும் காரில் தயாராக இருந்தனர்.
அவர்கள் கயல்விழிக்கு பணம் தருவதாக கூறி காரில் ஏற்றி அழைத்து சென்றனர். பின்னர் காரில் வைத்தே 4 பேரும் சேர்ந்து கயல்விழியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை எடுத்து கொண்டனர். தொடர்ந்து சேரன்மாதேவி அருகே கங்கணாகுளம் பகுதிக்கு காரில் சென்ற அவர்கள், அங்குள்ள மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் கயல்விழியின் உடலை வீசிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து சிவசாமி, மாயாண்டி ராஜா, கண்ணன், சிவனேஸ்வரி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள், கங்கணாங்குளம் மணிமுத்தாறு கால்வாயில் கயல்விழியின் உடலை வீசிய இடத்தை அடையாளம் காட்டினர். அப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்கு கயல்விழியின் எலும்புக்கூடு மற்றும் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
கைதான 4 பேரிடம் இருந்து 7 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கொலைக்கு பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 17, ஜூன் 2025 4:24:29 PM (IST)

திருநெல்வேலியில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்து சேவை துவக்க விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:01:37 PM (IST)

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை : நடத்தை சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்!
செவ்வாய் 17, ஜூன் 2025 10:33:53 AM (IST)

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாள்: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி
செவ்வாய் 17, ஜூன் 2025 10:14:40 AM (IST)

விஞ்ஞானி நெல்லை சு. முத்து காலமானார்: அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர்!!
திங்கள் 16, ஜூன் 2025 12:31:27 PM (IST)

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!
சனி 14, ஜூன் 2025 5:17:55 PM (IST)

மக்கள்Jun 17, 2025 - 09:50:33 AM | Posted IP 172.7*****