» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாள்: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

செவ்வாய் 17, ஜூன் 2025 10:14:40 AM (IST)



சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவு நாளையொட்டி அவருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன். இவர் கடந்த 1911ம் ஆண்டு ஜுன் 17ம் தேதி மணியாச்சி ரெயில் நிலையத்தில் அப்போதைய கலெக்டர் ராபர்ட் ஆஷை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், வாஞ்சிநாதனின் நினைவு நாளையொட்டி அவருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாரதத் தேசத்தை அடிமைப்படுத்தியதோடு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, சித்திரவதை செய்த ஆங்கிலேய கொடுங்கோலர்களின் கொட்டத்தை அடக்க, தனது இருபத்தைந்து வயதிலேயே தேசத்திற்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த மாவீரர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவு நாள் இன்று.

வீரத்தையும் தியாகத்தையும் நினைவுறுத்தும் இத்திருநாளில், வாஞ்சிநாதன் அவர்களின் புகழைப் போற்றுவோம்' தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory