» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாள்: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி
செவ்வாய் 17, ஜூன் 2025 10:14:40 AM (IST)

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவு நாளையொட்டி அவருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன். இவர் கடந்த 1911ம் ஆண்டு ஜுன் 17ம் தேதி மணியாச்சி ரெயில் நிலையத்தில் அப்போதைய கலெக்டர் ராபர்ட் ஆஷை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், வாஞ்சிநாதனின் நினைவு நாளையொட்டி அவருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாரதத் தேசத்தை அடிமைப்படுத்தியதோடு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, சித்திரவதை செய்த ஆங்கிலேய கொடுங்கோலர்களின் கொட்டத்தை அடக்க, தனது இருபத்தைந்து வயதிலேயே தேசத்திற்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த மாவீரர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவு நாள் இன்று.
வீரத்தையும் தியாகத்தையும் நினைவுறுத்தும் இத்திருநாளில், வாஞ்சிநாதன் அவர்களின் புகழைப் போற்றுவோம்' தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 17, ஜூன் 2025 4:24:29 PM (IST)

திருநெல்வேலியில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்து சேவை துவக்க விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:01:37 PM (IST)

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை : நடத்தை சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்!
செவ்வாய் 17, ஜூன் 2025 10:33:53 AM (IST)

நகைக்காக இளம்பெண்ணை கொன்று உடலை கால்வாயில் வீசிய கொடூரம்: 4 பேர் கைது!
செவ்வாய் 17, ஜூன் 2025 9:01:52 AM (IST)

விஞ்ஞானி நெல்லை சு. முத்து காலமானார்: அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர்!!
திங்கள் 16, ஜூன் 2025 12:31:27 PM (IST)

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!
சனி 14, ஜூன் 2025 5:17:55 PM (IST)
