» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்து சேவை துவக்க விழா

செவ்வாய் 17, ஜூன் 2025 12:01:37 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்து சேவையை சட்டமன்றப் பேரவைத்தலைவர் மற்றும் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தில் புதிய வழித்தடங்கள் மற்றும் புலம் பெயர் வழித்தடங்களுக்கான மினி பேருந்து சேவைகளை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (17.06.2025) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் என்.ஒ.சுக புத்ரா, துணை மேயர் கே.ஆர்.ராஜீ, முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதின் கான் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்த புதிய வழித்தடமானது மொத்தம் 25 கி.மீ ஆகும். 25 கி.மீ தாண்டி ஏதேனும் அரசு மருத்துவமனை, பள்ளி கல்லுரிகள், இரயில்நிலையம், உழவர் சந்தை, வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அல்லது புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் அமைந்திருக்குமாயின் கூடுதலாக 1 கி.மீ வரை இயக்கிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்றுந்துகளில் ஓட்டுநர்-நடத்துனர் தவிர்த்து 25 பயணிகள் பயணிக்கலாம். இந்த சிற்றுந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே இயக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்வதற்கு மினி பேருந்துகளில் வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 28 புதிய சிற்றுந்து வழித்தடங்கள் மற்றும் 6 புலம்பெயர் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு சிற்றுந்துகள் இயக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்று 8 புதிய வழித்தடங்கள் மற்றும் 6 புலம்பெயர் வழித்தடங்கள் என மொத்தம் 14 வழித்தடங்களில் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதிய வழித்தடங்கள் விவரம்:

1 திருநெல்வேலி சந்திப்பு முதல் சாய்பாபா கோவில் வரை, 2 தாழையுத்து ஈபி முதல் சிப்காட் வரை, 3 கங்கைகொண்டான் முதல் செழியநல்லுர் வரை, 4 மாவடி முதுல் ஏர்வாடி வரை, 5 ஜான்சன் நகர் சாய்பாபா கோவில் முதல் திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் வரை, 6இராமையன்பட்டி விரிவிக்கா பகுதி முதல் மானுர் யூனியன் ஆபிஸ் வரை, 7திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் முதல் சாய்பாபா கோவில் வரை, 8ஜான்சன் நகர் சாய்பாபா கோவில் முதல் திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் வரை என 8 புதிய வழித்தடங்கள்.

புலம்பெயர் வழித்தடங்கள் : திருநெல்வேலி சந்திப்பு முதல் செல்லத்துரை நகர் வரை 4 வழித்தடங்கள் சேவை திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் முதல் கலைக் கோவில் வரை 2 வழித்தட சேவைகள் என மொத்தம் 6 புலம் பெயரும் வழித்தடங்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட அரசிதழில் 3 முறை அறிவிக்கை வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 28 வாகன உரிமையாளர்கள் குலுக்கல் முறையில் வெளிப்படையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்முறையில் இயக்கப்படும் சிற்றுந்துகளில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 22 கி.மீ வரை ரூ.10 எனவும், 22 கி.மீ க்கு மேல் ரூ.11 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைவரும் பயனடைவார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.சுகன்யா, பயிற்சி ஆட்சியர் தவ லேந்து, திட்ட இயக்குநர் சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் என்.ஆர்.சரவணன், கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, மோட்டார் வாகன ஆய்வாளர் வி.பத்மபிரியா, உட்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory