» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சீலாத்திகுளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் : ராதாபுரம் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
புதன் 18, ஜூன் 2025 11:26:30 AM (IST)

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் ராதாபுரம் தாலுகா சட்டப் பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராதாபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குபேர சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். கும்பிகுளம் ஊராட்சி சார்பில் பொன்னாடை அணிவித்து நீதிபதியை கவுரவித்தனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் இசக்கியப்பன் மற்றும் சக வழக்கறிஞர்கள் சட்டப்பணி ஆணைக்குழுவின் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
சிறப்புரையாற்றிய நீதிபதி குபேர சுந்தர் சட்டப்பணி ஆணைக்குழு மூலம் நீதிகளை நாம் எப்படி பெற முடியும், நம் உரிமைகளை பெறுவதற்கு சட்டத்தில் என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பதை மிகவும் எளிமையாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்வெட்டி கணையால் மகளை அடித்துக்கொன்ற தந்தை : நெல்லையில் பயங்கரம்!
புதன் 18, ஜூன் 2025 3:58:31 PM (IST)

மகளிர் உரிமைத்துறையில் தற்காலிக பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்!
புதன் 18, ஜூன் 2025 3:16:01 PM (IST)

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்னை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!
புதன் 18, ஜூன் 2025 11:39:35 AM (IST)

ராமேஸ்வரம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிா்வாகம் தகவல்
புதன் 18, ஜூன் 2025 11:20:05 AM (IST)

வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்ற 10 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, ஜூன் 2025 8:37:30 AM (IST)

சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 17, ஜூன் 2025 4:24:29 PM (IST)
