» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சீலாத்திகுளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் : ராதாபுரம் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

புதன் 18, ஜூன் 2025 11:26:30 AM (IST)



நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் ராதாபுரம் தாலுகா சட்டப் பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராதாபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குபேர சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். கும்பிகுளம் ஊராட்சி சார்பில் பொன்னாடை அணிவித்து நீதிபதியை கவுரவித்தனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் இசக்கியப்பன் மற்றும் சக வழக்கறிஞர்கள் சட்டப்பணி ஆணைக்குழுவின் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். 

சிறப்புரையாற்றிய நீதிபதி குபேர சுந்தர் சட்டப்பணி ஆணைக்குழு மூலம் நீதிகளை நாம் எப்படி பெற முடியும், நம் உரிமைகளை பெறுவதற்கு சட்டத்தில் என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பதை மிகவும் எளிமையாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory