» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
நெல்லையில் தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற 10-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஜூலை மாதத்திற்கான தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வருகிற 10-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நெல்லை ஸ்ரீபுரம் அருகில் பீமா ஜூவல்லரி அருகில் ரோகிணி கோல்டு அகாடமியில் நடக்கிறது.
இதில் தங்கத்தின் தரம் அறிதல், ஹால்மார்க் தரம் அறியும் விதம் குறித்தும், உரைகல் பயன்படுத்தும் முறை, கேரட் மற்றும் தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை, கல், ஆபரண வகைகள், போலியான நகைகளை அடையாளம் காணுதல், அதற்கான வழிமுறைகள் கற்று தரப்படும். மேலும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு, தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணி பற்றியும், அவைகளை பெறும் முறைகளை பற்றி ஆலோசனைகளும் வழங்கப்படும். 18 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் பயிற்சியில் பங்கேற்கலாம்.
வயது வரம்பு, கல்வித்தகுதி தேவையில்லை. பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பயிற்சி கட்டணம் ஆகியவற்றுடன் நேரில் சென்று பயிற்சியில் சேரலாம். அல்லது 9842180162 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். இந்த சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகை பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 4, ஜூலை 2025 8:11:08 AM (IST)

ரம்புட்டான் பழவிதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் சாவு: நெல்லையில் சோகம்!!
வெள்ளி 4, ஜூலை 2025 8:07:59 AM (IST)

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)
