» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!

வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

தென்காசி அருகே வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகுமார் (29). இவர் தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து யாரும் இல்லாததை அறிந்து இளம்பெண் ஒருவர் குளிப்பதை எட்டிப்பார்த்தார். 

இதைக் கண்டு அந்த பெண் கூச்சலிடவே மனோகுமார் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மனோகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து

NAAN THAANJul 5, 2025 - 11:43:05 AM | Posted IP 172.7*****

ஏற்கனவே அவன் ஒரு ஆயுதப்படையில் போலீஸ் அதனால் அவரை சட்டம் ஒழுங்கு அல்லது போக்குவரத்து பிரிவுக்கு மாற்றி ஒரு பெரிய தண்டனை அளித்து சக உயர் அதிகாரிகள் காப்பார்கள்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory