» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் இன்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக Internship முடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு Internship (பணி அனுபவ பயிற்சி) தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது தொழில் முனைவோர்களுக்கு தேவையான அரசு திட்டங்களை பற்றி மற்றும் புத்தாக்கத்திற்காக வழங்கி வரும் திட்டங்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.
முதல் கட்டமாக, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, முகமது இஸ்மாயில் ஐடிஐ கல்லூரியை சார்ந்த 7 மாணவ, மாணவியர்களுக்கு Internship பயிற்சி முடித்தற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி, பாராட்டினார்கள். இந்நிகழ்வில், மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன திட்ட மேலாளர் மு.சிவ பாரதி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா: சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:51:08 PM (IST)

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)
