» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் இன்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக Internship முடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு Internship (பணி அனுபவ பயிற்சி) தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது தொழில் முனைவோர்களுக்கு தேவையான அரசு திட்டங்களை பற்றி மற்றும் புத்தாக்கத்திற்காக வழங்கி வரும் திட்டங்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.
முதல் கட்டமாக, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, முகமது இஸ்மாயில் ஐடிஐ கல்லூரியை சார்ந்த 7 மாணவ, மாணவியர்களுக்கு Internship பயிற்சி முடித்தற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி, பாராட்டினார்கள். இந்நிகழ்வில், மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன திட்ட மேலாளர் மு.சிவ பாரதி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

