» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் கொலை முயற்சி, வழிப்பறி வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
புதன் 13, ஆகஸ்ட் 2025 4:05:09 PM (IST)
நெல்லையில், வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல், திருட்டு போன்ற வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட ராஜவல்லிபுரம், பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பொன்னுமணி (28), சங்கர்நகர், ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்த ஆறுமுகம் மகன் உதய பிரகாஷ் (23) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 2 பேரும் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி அறிக்கையின் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் சுகுமார் 2பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2பேரும் பாளை., மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
