» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: பழைய குற்றாலம் அருவியில் குளிக்க நேரம் குறைப்பு
சனி 20, செப்டம்பர் 2025 3:21:52 PM (IST)
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். இதில் பழைய குற்றாலம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசிப்பதால் அந்த அருவி வனத்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
பழைய குற்றாலம் அருவியில் மட்டும் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக பழைய குற்றாலம் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. தனியார் விடுதிகள் அருகே சாலையில் எவ்வித பயமும் இன்றி கரடி உலாவிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
எனவே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி வனக்கோட்டம் குற்றாலம் காப்புக்காட்டில் அமைந்துள்ள பழைய குற்றாலம் அருவி பகுதியில் இரவு நேரங்களில் யானைகள், கரடிகள், மிளா உள்பட பல அரிய வகை விலங்குகள் குடிநீர் தேவைக்காக உலா வருகின்றன.
பழைய குற்றாலம் செல்லும் சாலை வழியாக மாலை நேரங்களில் கடந்த சில நாட்களாக ஒற்றை கரடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இனிமேல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படும்.
பழைய குற்றாலம் சாலையில் சுற்றுலா பயணிகள் முடிந்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்கும் நேரத்தில் ஒருமணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் தயவால் தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:36:32 PM (IST)

திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 2, அக்டோபர் 2025 12:23:25 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: ஆட்சியர் தகவல்!
புதன் 1, அக்டோபர் 2025 10:20:11 AM (IST)

நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
புதன் 1, அக்டோபர் 2025 8:44:07 AM (IST)

காந்தி ஜெயந்தி: அக்.2ம் தேதி மது விற்பனைக்கு தடை - ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:42:09 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன் நபி விழா
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:31:18 AM (IST)
