» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் முகநூலில் சர்ச்சை பதிவு: வாலிபர் கைது!

புதன் 24, செப்டம்பர் 2025 3:43:48 PM (IST)

திருநெல்வேலி  மாவட்டத்தில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் முகநூலில் வசனங்கள் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், வடக்கு கும்பிளம்பாடு, நடுத் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் தங்கபாண்டி (35) என்பவர் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.

இதுகுறித்து ராதாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையைத் தூண்டும் விதமாக வசனங்கள் வைத்த தங்கபாண்டியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory