» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லூரி பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருட்டு : வேலைக்கார பெண் உள்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:28:01 AM (IST)
கூடங்குளம் அருகே பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் அழகிய நாயகி (50). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர். அழகிய நாயகியின் தந்தை இறந்துவிட்டதால் செட்டிகுளத்தில் உள்ள பூர்வீக வீட்டில் அவரது தாயார் மட்டும் வசித்து வருகிறார்.
வீட்டு வேலைக்காக ஊரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த செல்வகுமார் மனைவி சத்யா (29) என்பவரை நியமித்திருந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி அழகிய நாயகி கடந்த 18-ந் தேதி தனது தாயாரை பார்ப்பதற்காக செட்டிகுளத்துக்கு வந்தார். அப்போது எதார்த்தமாக பீரோவை திறந்து பார்த்தார். ஆனால் அங்கு நகைகள் எதுவும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ரகுராஜன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் நிஜல்சன் மற்றும் கிருபா ஆகியோர் தனி வியூகம் அமைத்து விசாரணை நடத்தினர். அதில் அழகிய நாயகியின் தாயார் வீட்டில் திருடியது, அங்கு வேலைபார்த்த சத்யா என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சத்யா, அவரது கணவர் செல்வகுமார், உறவினர் தினேஷ் என 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
வீட்டு வேலைகளை கவனித்த சத்யா, எங்கேங்கு, என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதையும் நோட்டமிட்டு வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் அழகிய நாயகிக்கு சொந்தமான 31 பவுன் நகை இருப்பதை அறிந்துகொண்டார். உடனே இதுகுறித்து தனது கணவர் செல்வகுமாரிடம் கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து நைசாக 31 பவுன் நகைகளையும் திருடினர். அவற்றை தங்களின் உறவினரான தினேஷ் என்பவரிடம் கொடுத்தனர்.
அதனை தினேஷ் அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து பணத்தை பங்குபோட்டு ஆடம்பரமாக செலவழித்தது தெரியவந்தது. சத்யா உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் திருடி அடகு வைத்த 31 பவுன் நகைகளையும் மீட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:30:32 AM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)

கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:07:40 PM (IST)

ஆலங்குளம் திமுக பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்: சொத்துவரி தாமதமாக செலுத்தியதால் அதிரடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:38:04 AM (IST)




