» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைந்தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டு விழா!
சனி 8, நவம்பர் 2025 10:52:49 AM (IST)

பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு, தமிழாசிரியர் மு. விசுவநாதன் தலைமை வகித்தார். தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் இராம. தீர்த்தராப்பன், அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் புலவர் நீ. அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் தலைவர் பாப்பாக்குடி அ.முருகன் வரவேற்றார். இ. முருகேசன், விவேகானந்தா பாலர் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். பேராசிரியர் பா. செந்தில் குமரன், முத்தமிழின் மாண்பு என்ற தலைப்பில் பேசினார்.
கல்வியில் சிறந்து விளங்கிய 8 மற்றும் 10ஆவது வகுப்பு மாணவிகளுக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் வி.ஏ.மாரிவண்ணமுத்து, ஊராட்சித் தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். தமிழ் பணியில் ஈடுபட்டு வரும் பாமணி, நாறும்பூநாதன், ச. பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில், அகஸ்தியர்பட்டி ஐ. லெட்சுமணன் எழுதிய மனமே எல்லாம் எனும் நூலை அம்பை தமிழ் இலக்கியப் பேரவையின் செயலர் ச. இலட்சுமணன் வெளியிட்டார். தமிழறிஞர் ந. சுப்பையா, சொ. முத்துசாமி, ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத் தலைவர் கு.ம. சங்கரநாராயணன், நல்லாசிரியர் ச. மாடசாமி, உலகத் திருக்குறள் மைய மாவட்டத் தலைவர் வை. இராமசாமி, கல்லிடைக்குறிச்சி வாசகர் வட்டத் தலைவர் திருவருள் லத்திப், முக்கூடல் மனவளக்கலை மன்ற பேராசிரியர் ச. கோபாலகிருஷ்ணன், வீரவநல்லூர் வாசகர் வட்டத் தலைவர் பீ. ஆதம் இல்யாஸ், கலைப் பதிப்பக உரிமையாளர் பாப்பாக்குடி இரா. செல்வமணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். த. சந்தனகுமார், த. ராஜேந்திரன், வீரை ஆ. ராஜேந்திரன் ஆகியோர் கவிதை வாசித்தனர். நிகழ்ச்சியை சீதாராமன் தொகுத்து வழங்கினார். மு. செல்வகுமார் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
சனி 8, நவம்பர் 2025 8:47:30 AM (IST)

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வில் வினாத்தாள் மாறியதால் பரபரப்பு
வெள்ளி 7, நவம்பர் 2025 8:44:49 AM (IST)

குடும்பத் தகராறில் சரமாரியாக வெட்டிய வாலிபர் : மாமியார் உயிரிழப்பு, மனைவி படுகாயம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:30:36 AM (IST)

தாமிரபரணி கரையில் பனை விதைகள் விதைக்கும் விழா: சபநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்!
வியாழன் 6, நவம்பர் 2025 5:16:48 PM (IST)

நெல்லையில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்: தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
வியாழன் 6, நவம்பர் 2025 4:06:52 PM (IST)




