» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாவட்டத்தில் 46.42 சதவீதம் படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம்: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:02:21 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு வாக்காளர்களால் நிரப்பப்பட்ட முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் BLO App-இல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமானது 01-01-2026ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கீட்டு படிவங்களை நிரப்பி வழங்கிட வாக்காளர்களுக்கு உதவி செய்யும் விதமாக இன்றையதினம் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் வட்டம் வாகைகுளம் ஊராட்சி மற்றும் உக்கிரன்கோட்டை ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இதுவரை நேற்று 24.11.2025 மாலை 4.00 மணி வரை 6,58,344 கணக்கீட்டு படிவங்கள் 46.42 சதவீதம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் போன்ற இடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மற்றும் தன்னாவலர்கள் மூலம் BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 25, நவம்பர் 2025 7:48:43 PM (IST)

விவசாய மின் இணைப்பிற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் கைது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:55:30 PM (IST)

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானவர் கைது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:43:37 PM (IST)

தென்காசி விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு : பஸ்சின் உரிமம் ரத்து!
செவ்வாய் 25, நவம்பர் 2025 8:38:27 AM (IST)

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் மனு மீது நவ.27ல் விசாரணை!
திங்கள் 24, நவம்பர் 2025 5:19:39 PM (IST)

தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி மன வேதனை அளிக்கிறது: விஜய் இரங்கல்
திங்கள் 24, நவம்பர் 2025 4:05:34 PM (IST)




