» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த வாலிபர் கைது
வெள்ளி 28, நவம்பர் 2025 8:38:33 AM (IST)

திருநெல்வேலி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி அருகே உள்ள முன்னீர்பள்ளம் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பொன்னாங்குடி பாலம் அருகே முன்னீர் பள்ளம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ், உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம், எட்வின் அருண்ராஜ் மற்றும் காவலர்கள் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையின் போது வேகமாக வந்த இரண்டு நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வாகனம் ஓட்டி வந்த கொங்கத்தான் பாறை அதிபன் பாலாஜி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (23) என்பவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் வாகனத்தை சோதனை செய்த பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருளான கணேஷ் புகையிலை, கூல் லிப், விமல் பான் மசாலா, v1 டோபாக்கோ ஆகிய தடை செய்யப்பட்ட பொருட்கள் வெள்ளை முட்டையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை முன்னீர்பள்ளம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்த போது மேலும் இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட பொருட்கள் சுமார் ஏறத்தாழ 500 கிலோ என்று மதிப்பிடப்பட்டுள்ளது பெரிய மூட்டை 43, சிறிய மூட்டை 8 மேலும் காவல்துறையின் விசாரணையில் மேலும் ஒருவர் தப்பி ஓடியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் என்பவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : திமுக வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்!
வெள்ளி 28, நவம்பர் 2025 7:52:04 AM (IST)

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி இடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 27, நவம்பர் 2025 5:06:22 PM (IST)

குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
வியாழன் 27, நவம்பர் 2025 4:24:35 PM (IST)

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வியாழன் 27, நவம்பர் 2025 12:12:42 PM (IST)

வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 27, நவம்பர் 2025 11:56:38 AM (IST)

கனமழையில் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப சுற்றுச்சுவர் சேதம்: தற்காலிகமாக சீரமைப்பு!
புதன் 26, நவம்பர் 2025 5:02:55 PM (IST)




